முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வைகோ Vaiko

வைகோ என்று அழைக்கப்படும் வையாபுரி கோபால்சாமி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் தமிழ்நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார் . அவர் முக்கியமாக இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு அரசியல் கட்சியான மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்( MDMK ) நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ஆவார் . இவர் முன்னதாக தமிழ்நாட்டின் சிவகாசியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . வைகோ பிறப்பு வையாபுரி கோபால்சாமி 22 மே 1944 (வயது 79) கலிங்கப்பட்டி , சங்கரன்கோவில் , தின்னவேலி மாவட்டம் , மெட்ராஸ் பிரசிடென்சி , பிரிட்டிஷ் இந்தியா (தற்போது தென்காசி மாவட்டம் , இந்தியா , இந்தியா அரசியல் கட்சி மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (1994) கல்வி பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை கலைப் பட்டத்தில் தங்கப் பதக்கம் மற்றும் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார் . மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார் . அவர் தமிழ்...

சிலை கடத்தல் வழக்குகளில் எந்த அர்ச்சகரையும் பொன்மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்? ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி

சிலைக் கடத்தல் வழக்குகளில் அறநிலையத்துறை அதிகாரிகளை மட்டும் தேடிப்பிடித்து கைது செய்யும் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல், இதுவரை எந்த அர்ச்சகரையும் கைது செய்யாதது ஏன் என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் பழமையான கோயில்களில் அறநிலையத்துறை அதிகாரிகளே கோயில் சொத்து களை சுரண்டி கோடிக்கனக்கான ரூபாய்க்கு விற்றதாக குற்றச்சாட்டு கள் எழுந்தன. இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக் குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அறநிலையத்துறை அதிகாரிகள் பலரை பொன்மாணிக்கவேல் அதிரடியாக கைது செய்துவரும் சூழலில், ‘‘தமிழக கோயில்களில் இருந்து அறநிலையத்துறை வெளி யேற வேண்டும்” என்று வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி யுமான கங்கப்பா கருத்து தெரி வித்திருந்தார். இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்திருந்த பேட்டியில், கடந்த 1981-ம் ஆண்டு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் 400 ஆண்டுகளாக மூலவர் இல்லாத நிலையில் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்ததில் ஒரு ஆட்சியராக தனது பங்க ளிப்பு முக்கியமான...

பற்றி எறியும் சேலம் தீவட்டிப்பட்டி ! நடந்தது என்ன??

சேலம் மாவட்டம் தீவப்பட்டியில் திருவிழா நடத்துவதில் இன்று (மே 2) இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை மோதலாக வெடித்துள்ளது. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இங்கு வன்னியர் தரப்பினர் மட்டுமே இந்த திருவிழாவை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அதே பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கோவிலில் நாங்களும் திருவிழா நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. அப்பொழுது தீவட்டிப்பட்டி பகுதியில் இருந்த பேக்கரி, டீக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கடைகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையிலான 200க்கும் மேற்பட்ட காவல் துறையி...

தமிழ்நாட்டின் மதுவிலக்கு வரலாறு

பிரிட்டிஷ் இந்தியாவில் மதுவிலக்கு பிரிட்ஷ் இந்தியா காலத்தில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தபோது மதுவிலக்கு என்பது மகாத்மா காந்தியடிகளின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி தனது சொந்த மாவட்டமான சேலத்தில் முதன்முதலாக மதுவிலக்கை அமல்படுத்தினார். பின்னர் அதனை சித்தூர், கடப்பா, வட ஆற்காடு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார். அதற்கு பின்னர் மதராஸ் மாகாண முதல்வரான ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் மாகணம் முழுவதும் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தினார். இதனால் மதராஸ் மாகாணம் முழுவதும் செயல்பட்டு வந்த சாராயக் கடைகளும் கள்ளுக்கடைகளும் மூடப்பட்டன. பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் சில மருத்துவ தேவைகளுக்காக மட்டும் மருத்துவர்களின் அனுமதியை பெற்று அரசின் பெர்மிட் வாங்கி மது அருந்தலாம் என்ற தளர்வால் பணக்காரர்கள் பலர் சான்று பெற்று மது அருந்த தொடங்கினர். கள்ளச்சாராய கண்காணிப்புக்கும், கள்ளச்சாராய ஒழிப்புக்கும் அதிக நிதியை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. மது விற்பனை தொடக்கமும் முடிவும் இந்த நிலையில் அண்ணா மறைவுக்கு பிறக...

கா.ந.அண்ணாதுறை

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார் பிறப்பு அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் செங்குந்தக் கைக்கோள முதலியார் மரபில் கைத்தறி நெசவாளர் நடராசன் முதலியார் - பங்காரு அம்மாள் என்பவருக்கு மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) பிறந்தார்.[5] நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார்.[6] சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்விக் கற்றார். இளமைப் பருவம் அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் காஞ்சீவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராச முதலியார்[7] மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.[8]...

ம. பொ. சிவஞானம்

சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் (Ma.Po.Sivagnanam, 26 சூன் 1906 – 3 அக்டோபர் 1995) 1956-ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாகப் போற்றப்படுபவர் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவர்.சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது. வாழ்க்கை குறிப்பு மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். 31 ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இரு மகள்கள் எனக் குழந்தைகள். பின்னர்...

ஈ. வெ. இராமசாமி

தமிழ் அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி மற்றும் பகுத்தறிவுவாதி பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கடப்பா இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.[2] இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரம தருமம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.[3][4][5][6][7] இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ...