முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தற்கால தமிழ்நாட்டின் வரலாறு க.வெங்கடேசன் [PDF]

தற்கால தமிழ்நாட்டு வரலாறு - டாக்டர் க.வெங்கடேசன் (History of Modern Tamil Nadu - Dr. G.Venkatesan) தற்கால தமிழ்நாட்டு வரலாறு' தமிழ்நாட்டு வரலாற்று வரைவியியலில் ஒரு புதிய முயற்சியாகும். வழக்கமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து (1801) தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் தமிழக வரலாறு வரையப்படுகிறது. எனினும், இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயர் தமிழ்நாட்டில் காலூன்றிய காலத்திலிருந்து தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆங்கிலேயர் தற்காலத்தின் சின்னமான அறிவியல்-தொழில்நுட்ப அணுகுமுறையில் ஆட்சி செய்ததேயாகும். தற்கால தமிழ்நாட்டு வரலாறு 17 ஆம் நூற்றாண்டுக்கும் 21ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகளை உள்ளடக்கியது. இந்த நூல், அனைத்து நிலை வரலாற்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆட்சிப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கும் மிகு பயன் தருவதாகும்.

அரசியல் சட்ட எரிப்பு கிளர்ச்சி

ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு பெரியார் இயக்கத்துக்கு மட்டுமே உண்டு. 1957 நவம்பர் 26இல் அரசியல் சட்டத்தில் ஜாதி இழிவு ஒழிப்புக்குத் தடையாக உள்ள உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2), 368 பிரிவுகளை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை தஞ்சையில் திராவிடர் கழக சிறப்பு மாநாட்டை 3.11.1957 அன்று கூட்டி பெரியார் அறிவித்தார். சரியாக 24 நாட்கள் இடைவெளியில் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். பெரியார் தஞ்சை மாநாட்டுச் சிறப்பை தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார். "எனது 40 ஆண்டுகால வாழ்க்கையில் எத்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன்; சுயமரியாதை இயக்க கால முதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கல்பட்டில் நடந்தது. அதுதான் 'ரிக்கார்டு'. மாநாடு ஜமீன்தாரர்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள். எல்லா சட்டசபை மெம்பர்களும் எல்லா மந்திரிகளும் வந்திருந்தார்கள். நல்ல கூட்டம் இருந்தாலும் இதில் அரை பங்குக்குக் குறைவான அளவுதான் இருக்கும். இதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும் இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக...

அவ்வப்போது Digital book in PDF format

அவ்வப்போது நூல் அறிமுகம் இந்நேரம்.காம் எனும் செய்தி தளத்தில் அவ்வப்போது எழுதிவந்த பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு. நூல் ஆசிரியர் அறிமுகம உரை இன்ன தலைப்புதான் என்றில்லாமல் அவ்வப்போது மனத்தில் தோன்றியவற்றை எழுதி அவை கட்டுரைகளாயின. Blog ஆரம்பித்து குப்பைக் கொட்டாமல் இங்கு வந்து கொட்டேன் என்று இந்நேரம்.காம் செய்து கொடுத்த வசதியில் அது ஒரு தொடராகவே வெளிவந்துவிட்டது. குறிப்பிட்ட இடைவெளிகளில் எழுதித் தந்துவிட வேண்டும் என்ற அவசரமில்லாமல் தோன்றியபோது தோன்றியதை எழுதி அனுப்பி, சிறுகச் சிறுக இருபது அத்தியாயங்களாகி விட்டன. அதன் தொகுப்பே இந் நூல், வாசிக்கலாம்; உய்யலாம்; பகிரலாம். அன்புடன், -நூருத்தீன் ONE CLICK TO DOWNLOAD

The toilet seat கழிவறை இருக்கை -லதா digital book in PDF FORMAT

"கழிவறை இருக்கை"யின் புத்தகம் (The Toilet Seat) இந்த சமூகத்தில் காமம் என்பது தவறானது என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. பாலியல் கல்வியின் முக்கியத்துவம், பாலுணர்வை அடக்குவதால் ஏற்படும் விளைவுகள், உறவுகளில் கல்வி சரியாக அமையாததற்கான காரணம் போன்ற பல விஷயங்களை இந்த புத்தகம் பிரதிபலிக்கிறது. கழிவறை இருக்கை புத்தகத்தை இலவசமாக PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் நமது தந்தை பெரியார் நூலகத்தில் தளத்திலோ அல்லது

Digital Book: The RSS: Icons of the Indian Right by Nilanjan Mukhopadhyay, 2019

Digital Book: The RSS : Icons of the Indian Right by Nilanjan Mukhopadhyay, 2019 Author Note This book defines itself. The Indian Rightwing understandably evokes extreme reactions. This is especially true of the Rashtriya Swayamsevak Sangh (RSS), its affiliates and individuals who have at various times influenced its thought processes and actions. I was drawn to its workings from the early 1980s, thanks to encouragement from my editors who gave me the opportunity to report and analyse several episodes involving communal conflict. Later, many proceeded to indulge me in what they defined as my growing ‘obsession’ with the Ayodhya dispute. Often their point being, and this group gradually included many politicians and several close friends, about my interest in subjects involving sectarian violence. There was of course scepticism about my premise and many arguments would be put forth about the ‘inherent secular character of Indians’. I was told ad nauseam that this was a ‘transitory pha...

மதங்களின் பார்வையில் பெண்கள் -தோழர் ஜார்ஜ் டிமிட் ரொவ் BOOK PDF

தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் , மதங்களின் பார்வையில் பெண்கள் என்ற சிறு நூலை எழுதியிருப்பது ஒரு நல்ல முயற்சி. பாலின சமத்துவ பார்வையுடன் விவரங்களை ஆய்வு செய்ய பிரயத்தனம் செய்துள்ளார். இளைஞர்களின் ஒரு பகுதி உலகம் ரசிகர் மன்றங்களாகவும், ஒரு பகுதி உலகம் காசு, பணம், துட்டு, மணி, மணி என்றும், ஒரு பகுதி உலகம் சமூக விரோத நடவடிக்கைகளாகவும், ஒரு பகுதி உலகம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையுடனும் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சமூக பிரக்ஞையோடு, சமுதாய மாற்றத்தோடு தொடர்புடைய இந்த நடவடிக்கையில் ஜார்ஜ் ஈடுபட்டது பாராட்டுக்குரியது. இதற்கான பின்புலமாக மார்க்சிய இயக்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இருப்பதுதான் உண்மை. இந்த முயற்சியில், ஜார்ஜ் டிமிட்ரோவ் வரலாறை சற்று அலசிப் பார்த்திருக்கிறார். சில நூல்களைப் படித்து விவரம் சேகரித்திருக்கிறார். இதுவரை எழுதப்பட்ட வரலாறு உண்மையில் வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான். ஆனால், அது அவன் கதையாக (History His Story) மட்டும் இல்லாமல், அவள் கதையாகவும் (Her Story) இருக்கவேண்டும் என்பது முக்கியமானது. தோழர் லெனின், கிளாரா ஜெட்கின் போன்ற புரட்சியாளர்கள் இந்த அம்சத...

பெரியார் தமிழினத்தின் பகைவரா? - வாலாசா வல்லவன் PDF

வாலாசா வல்லவன் அவர்கள் எழுதிய பெரியார் தமிழினத்தின் பகைவரா என்ற புத்தகத்தை நமது தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பகுத்தறிவை வளர்த்து கொள்ளும். உங்களை சுற்றி இருப்போரையும் விழிப்புணர்வு செய்யுங்கள். சிறு குறிப்பு "இமய மலைக்கும் விந்திய மலைக்கும். கங்கை ஆற்றுக்கும் சிந்து ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஆரிய வணிகத்திலிருந்த சூத்திரப் பட்டத்தைத்தமிழர்களுக்குச் சூட்டி இழிவுபடுத்தினார் ஈ.வெ.ரா. தமிழர்களைப் பார்ப்பனர்கள் சூத்திரன் என்று அழைத்ததாகக் கூறிய ஈ.வெ.ரா. 'சூத்திரர். சூத்திரர் என்று திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கினார் என்று கூறுகிறார். இது எவ்வளவு உலகப் பெரும் பொய் என்பது வரலாறு படித்த அனைவருக்கும் தெரியும். திருவள்ளுவர் காலத்திலேயே, 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் ஆரியம் ஊடுருவித் தமிழர்களை இழிவுபடுத்தியது என்பதற்குத் திருவள்ளுவரே சான்று. One Click To Download..