முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிராமணர் அல்லாதார் கொள்கை அறிக்கை (The Non-Brahmin Manifesto December 1916)

பிராமணர் அல்லாதார் கொள்கை அறிக்கை (The Non-Brahmin Manifesto December 1916) 20 டிசம்பர் 1916 அன்று பிராமணர் அல்லாதார் கொள்கை அறிக்கை (The Non-Brahmin Manifesto December 1916) வெளியானது. அறிக்கையில் கையெழுத்து போட்டவர் சங்கத்தின் செயலாளர் பிட்டி, தியாகராய செட்டியார்.விரிவான, விளக்கமான அறிக்கை அது. மாநிலத்தின் மக்கள் தொகை நாலரை கோடி. அதில் நாலு கோடிக்கும் குறையாதவர்கள் பிராமணர் அல்லாத மக்கள். வரி செலுத்துவோரில் பெரும்பான்மையோர் அவர்களே. ஆனாலும் அரசியலைத் தம் வாழ்க்கைக்கு வருவாய் தரும் தொழிலாக உடைய அரசியல் வணிகர்களும் மக்களிடையே செல்வாக்கு இல்லாத தான்தோன்றிகளும் நாட்டின் தலைவர்கள் என்றும் மக்களின் பிரதிநிதிகள் என்றும் கூறிக்கொண்டு நாட்டில் உலவிக் கொண்டிருக் கிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட எந்த அமைப்பையும் பிராமணர் அல்லாத மக்கள் உருவாக்கவில்லை என்ற ஆதங்கத்தை முதலில் தெரிவித்துக் கொண்டது தென்னிந்திய நலவுரிமைச்சங்கம். அரசின் வேலைவாய்ப்புகள் எப்படி பிராமணர்களுக்கு மட்டுமே அதிக அளவில் பங்கீடு செய்யப்படுகிறது என்பது சென்னை எக்ஸிக்யூட்டிவ் கவுன்சில் உறுப்பினராக இருந்த...

பங்குச்சந்தை என்றால் என்ன முழு விவரம்

பங்குச் சந்தை  என்பது பங்குச் சந்தையின் முக்கிய அங்கமாகும். இது நிதிக் கருவிகளின் வர்த்தகர்களுக்கும் இலக்கு வாங்குபவர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனையை எளிதாக்குகிறது. இந்தியாவில் உள்ள பங்குச் சந்தையானது செக்யூரிட்டீஸ்  அண்ட் எக்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா அல்லது செபியால்  இயக்கப்படும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் தொகுப்பைக் கடைப்பிடிக்கிறது . முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், இந்தியாவின் பங்குச் சந்தையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும் கூறப்பட்ட அதிகாரபூர்வமான அமைப்பு செயல்படுகிறது. பங்குச்சந்தை என்றால் என்ன? பங்குகள் , பத்திரங்கள் மற்றும் பொருட்கள்  போன்ற நிதிக் கருவிகள் வர்த்தகம் செய்யப்படும் சந்தையாக இந்தியாவில் பங்குச் சந்தை செயல்படுகிறது  . செபி செபியின் நன்கு வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, எந்தவொரு வணிக நாளின் குறிப்பிட்ட நேரங்களிலும், வாங்குபவர்களும் விற்பவர்களும் நிதிக் கருவிகளை வர்த்தகம் செய்ய ஒரு தளமாகும். இருப்பினும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே   அதில் வர்த்தகம் செய...

நெல்லை மாவட்ட வரலாறு

நெல்லை தோற்றம் 1790-ல் கிழக்கு இந்தியா கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801-ல் பிரிட்டிஷார் இந்த நகரை கையகப்படுத்தி “Tinnevelly’ மாவட்டம் என பெயரிட்டனர். முதலில் திருநெல்வேலி நகதை அடுத்து அமைந்துள்ள பாளைங்கோட்டையை தலைமையிடமாக கொண்டுதான் இந்த மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பாளையக்காரர்களுககு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்ற போது பாளையங்கோட்டையைத்தான் பிரிட்டிஷார் தங்களது இராணுவ தலைமையிடமாக வைத்திருந்து செயல்பட்டனர். பின் காலங்களில் திருநெல்வேலி நகரை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டதாலும், திருநெல்வேலி சீமை என நாயக்கர் நவாப் காலங்களில் அழைக்கப்பட்டதாலும் இது தொடர்ந்து ”திருநெல்வேலி மாவட்டம்” என்ற பெயரில் அழைக்கப்படலாயிற்று. 20-10-1986 முதல் திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி என்ற புதிய மாவட்டம் உதயமானது. இம்மாவட்டதிலுள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை என்ற இரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்பட்டு எல்லாவிதத்திலும் வேகமாக வளர்ந்தன. புவியியல் அமைப்பு உலக வரைபட...

பணம் சார் உளவியல்_The Psychology of Money by மார்கன் ஹௌஸ்ஸேல்[PDF]

மோர்கன் ஹவுஸ்லின் தி சைக்காலஜி ஆஃப் மனி" என்பது மனித நடத்தை மற்றும் நிதி முடிவுகளுக்கு இடையே உள்ள சிக்கலான உறவின் சிந்தனையைத் தூண்டும் ஆய்வு ஆகும். 2020 இல் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், பாரம்பரிய நிதி ஆலோசனைகளைத் தாண்டி, உளவியல் அம்சங்களை ஆராய்வதற்கான ஒரு புத்துணர்ச்சியூட்டும் பார்வையை வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த நிதி எழுத்தாளர் மற்றும் கூட்டு நிதியத்தின் பங்குதாரரான ஹவுஸ்ல், நிஜ உலக நிகழ்வுகள், வரலாற்று எடுத்துக்காட்டுகள் மற்றும் உளவியல் நுண்ணறிவுகளை ஒன்றிணைத்து, வாசகர்களை எதிரொலிக்கும் வகையில் உருவாக்குகிறார். இந்த புத்தகம் பணத்தை நிர்வகிப்பதற்கான ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, இது எங்கள் நிதி நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பயணமாகும் நிதியியல் கல்வியறிவின் நிலைகள், அவரது சொந்த அனுபவங்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க நபர்களிடமிருந்தும் வரையப்பட்ட கதைசொல்லல் அணுகுமுறை, நிதி நிபுணரின் விரிவுரையை விட அறிவார்ந்த நண்பருடன் உரையாடுவதைப் போன்றது. செல்வம் என்பது இருப்புநிலைக் குறிப்பில் உள்ள டாலர்கள் மற்றும் சென்ட்களைப் பற்றியது மட்டுமல்ல, பணத்துடனான நமது உறவை வடிவமைக்கும் உணர்ச்சிகள்,...

தற்கால தமிழ்நாட்டின் வரலாறு க.வெங்கடேசன் [PDF]

தற்கால தமிழ்நாட்டு வரலாறு - டாக்டர் க.வெங்கடேசன் (History of Modern Tamil Nadu - Dr. G.Venkatesan) தற்கால தமிழ்நாட்டு வரலாறு' தமிழ்நாட்டு வரலாற்று வரைவியியலில் ஒரு புதிய முயற்சியாகும். வழக்கமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து (1801) தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் தமிழக வரலாறு வரையப்படுகிறது. எனினும், இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயர் தமிழ்நாட்டில் காலூன்றிய காலத்திலிருந்து தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆங்கிலேயர் தற்காலத்தின் சின்னமான அறிவியல்-தொழில்நுட்ப அணுகுமுறையில் ஆட்சி செய்ததேயாகும். தற்கால தமிழ்நாட்டு வரலாறு 17 ஆம் நூற்றாண்டுக்கும் 21ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகளை உள்ளடக்கியது. இந்த நூல், அனைத்து நிலை வரலாற்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆட்சிப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கும் மிகு பயன் தருவதாகும்.

அரசியல் சட்ட எரிப்பு கிளர்ச்சி

ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு பெரியார் இயக்கத்துக்கு மட்டுமே உண்டு. 1957 நவம்பர் 26இல் அரசியல் சட்டத்தில் ஜாதி இழிவு ஒழிப்புக்குத் தடையாக உள்ள உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2), 368 பிரிவுகளை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை தஞ்சையில் திராவிடர் கழக சிறப்பு மாநாட்டை 3.11.1957 அன்று கூட்டி பெரியார் அறிவித்தார். சரியாக 24 நாட்கள் இடைவெளியில் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். பெரியார் தஞ்சை மாநாட்டுச் சிறப்பை தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார். "எனது 40 ஆண்டுகால வாழ்க்கையில் எத்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன்; சுயமரியாதை இயக்க கால முதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கல்பட்டில் நடந்தது. அதுதான் 'ரிக்கார்டு'. மாநாடு ஜமீன்தாரர்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள். எல்லா சட்டசபை மெம்பர்களும் எல்லா மந்திரிகளும் வந்திருந்தார்கள். நல்ல கூட்டம் இருந்தாலும் இதில் அரை பங்குக்குக் குறைவான அளவுதான் இருக்கும். இதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும் இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக...