முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறநிலையத்துறை மசோதா - நீதிக்கட்சி

அற நிலைய மசோதா

அறநிலையங்கள் செயல்படும் விதத்தை இந்தக் குழு கண்காணிக்கும். தேவையான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் அற நிலையங்களுக்குத் தேவையான காரியங்களை அரசு செய்யும். அறநிலையங் களில் புழங்கிய நிதிக்கு முறையான கணக்குகள் பதிவுசெய்யப்பட்டன. தவிர வும், பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்த அறநிலையங்கள் பகுதி அளவில் பிராமணர் அல்லாதாரின் கைகளுக்கும் வந்து சேர்ந்தன. நீதிக்கட்சி இரண்டாவது முறை ஆட்சி அமைத்த பிறகு முக்கியத்துவம் வாய்ந்த நீர்மானங்கள், சட்டங்கள் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானது, 1926ல் நிறைவேறிய இந்து அறநிலையங்கள் பாதுகாப்புச் சட்டம். இந்துமதக் கோயில்களுக்குச் சொந்தமாக என்னென்ன நகைகள் இருக்கின்றன, நிலங்கள் எவ்வளவு உள்ளன. சொத்துகள் எங்கெங்கு உள்ளன. அவற்றை நிர்வகிப்பவர்கள் யார். கணக்கு வழக்குகள் யார் வசம் இருக்கின்றன என்பது பற்றி எந்த விவரத்தையும் அறிந்துகொள்ளமுடியாத சூழல் அப்போது இருந்தது. இனியும் அதே நடைமுறை கூடாது. எல்லாவற்றையும் மாற்றவேண்டும் முறைப்படுத்த வேண்டும். விரைவில் மசோதா கொண்டுவரப்படும் என்ற அறிவித்தது நீதிக்கட்சி அரசு. பிராமணர்கள் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்புகள் தேவையற்ற முறையில் இந்து மத விஷயத்தில் அரசு தலையிடுகிறது. வேண்டாம். ஒதுங்கிச் கொள்ளுங்கள் என்றனர். ஆனால் எப்படியும் இந்த மசோதாவைக் கொண்டு வருவதில் ராமராய நிங்கார் உறுதியாக இருந்தார். அறநிலையப் பாதுகாப்புச் காகவே மசோதா கொண்டுவரப்படுகிறது. இதனால் மதத்துக்கு எந்தவி ஆபத்தும் ஏற்பட்டுவிடாது என்றார் ராமராய நிங்கார். அதன்படியே அறநிலையப் பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டது. இந்து, அதேசமித்திரன் உள்ளிட்ட பத்திரிகைகள் மசோதாவுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. பிராமணர்களை எதிர்ந்த நீதிக்கட்சியினர் இப்போது கடவுளையும் எதிர்க்கத் துணிந்துவிட்டனர் என்று பிரசாரம் செய்தனர். மசோதாவை நிறைவேற்றுவதற்கு வாதியாக என். கோபாலசாமி அய்யங்கார் என்பவரை சிறப்பு உறுப்பினராக நியமித்தார் முதலமைச்சர் ராமராய நிங்கார். மசோதா நிறைவேறி, சட்டம் கொண்டு வந்தபிறகு அமைக்கப்பட்ட அறநிலைய பாதுகாப்புத் துறையின் தலைவராக டி. சதாசிவ அய்யரை நியமனம் செய்தார். இதன்மூலம் காலம் காலமாக மூடிவைக்கப்பட்ட கணக்குகள் அம்பலத்துக்கு வந்தன. கணக்குகள் பொதுப்பார்வைக்கு வந்தன. ஆந்திரா பல்கலைக் கழகம் போல தமிழ் வழங்கும் பகுதிகளில் பிரத்யேகப் பல்கலைக் கழகம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுத்தது. ராமநாதபுரம் ராஜா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையில் அடிப் படையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 28 ஏப்ரல் 1925. உடல்நலம் குன்றியிருந்த பிட்டி. தியாகராயர் திடீரென மரணம் அடைந்தார். ஏற்கெனவே டி.எம். நாயர் என்ற படைத்தளபதியை இழந்திருந்த நீதிக்கட்சிக்கு தியாகராயரின் மறைவு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தியது. அதேசமயம், காங்கிரஸில் இருந்த பிராமணர் அல்லாத தலைவர்களுள் செல்வாக்கு நிறைந்தவரான ஈரோடு ராமசாமி அங்கிருந்து வெளியேறியிருந் தார். சென்னை மாகாண அரசியல் வரலாற்றைப் புரட்டிப் போட்ட நிகழ்வு இது. ஏன் காங்கிரஸில் இருந்து வெளியேறினார் ராமசாமி என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். பிறகு காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஈரோடு ராமசாமியையும் அழைத்துக்கொண்டு 1926 தேர்தல் களத்துக்கு வருவோம். ஏனெனில் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிப் பாதையைத் தீர்மானித்தவர் அவர்தான்!

எழுத்தாளர்

தோழர் சரண்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தற்கால தமிழ்நாட்டின் வரலாறு க.வெங்கடேசன் [PDF]

தற்கால தமிழ்நாட்டு வரலாறு - டாக்டர் க.வெங்கடேசன் (History of Modern Tamil Nadu - Dr. G.Venkatesan) தற்கால தமிழ்நாட்டு வரலாறு' தமிழ்நாட்டு வரலாற்று வரைவியியலில் ஒரு புதிய முயற்சியாகும். வழக்கமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து (1801) தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் தமிழக வரலாறு வரையப்படுகிறது. எனினும், இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயர் தமிழ்நாட்டில் காலூன்றிய காலத்திலிருந்து தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆங்கிலேயர் தற்காலத்தின் சின்னமான அறிவியல்-தொழில்நுட்ப அணுகுமுறையில் ஆட்சி செய்ததேயாகும். தற்கால தமிழ்நாட்டு வரலாறு 17 ஆம் நூற்றாண்டுக்கும் 21ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகளை உள்ளடக்கியது. இந்த நூல், அனைத்து நிலை வரலாற்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆட்சிப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கும் மிகு பயன் தருவதாகும்.

அமைப்பாய் திரள்வோம்- தொல் திருமாவளவன் [PDF]

கடைசி மனிதனுக்கும் சனநாயகம் - எளிய மக்களுக்கும் அதிகாரம் என்னும் இலட்சியத்தோடு புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் போன்ற தலைவர்களின் கருத்தியலை அனைத்து தளங்களிலும் வேரூன்ற செய்வதற்கு தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. விசிகவின் அடுத்தகட்டப் பாய்ச்சலாகத் தற்போது ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இலட்சியப் பாதையில் என்னுடன் இணைந்து பயணிக்க இணையதளத்தில் பதிவுசெய்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்! சமத்துவ சமுதாயம் அமைத்திட, வகுப்புவாத சக்திகளிடம் இருந்து சனநாயகத்தைப் பாதுகாத்திட நாம் அனைவரும் அணியமாவோம்! அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் எதிராக ஒன்றிணைந்து செயலாற்றுவோம்! "அமைப்பாய்த் திரள்வோம்! அதிகாரம் வெல்வோம்!" என்பது சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்டும் மற்றும் மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கமாகும். தொல். திருமாவளவன் இதனை முன்ன நடத்தியுள்ளார். இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் கீழே உள்ளன: முக்கிய நோக்கங்கள் • சமத்துவ சம...

பணம் சார் உளவியல்_The Psychology of Money by மார்கன் ஹௌஸ்ஸேல்[PDF]

மோர்கன் ஹவுஸ்லின் தி சைக்காலஜி ஆஃப் மனி" என்பது மனித நடத்தை மற்றும் நிதி முடிவுகளுக்கு இடையே உள்ள சிக்கலான உறவின் சிந்தனையைத் தூண்டும் ஆய்வு ஆகும். 2020 இல் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், பாரம்பரிய நிதி ஆலோசனைகளைத் தாண்டி, உளவியல் அம்சங்களை ஆராய்வதற்கான ஒரு புத்துணர்ச்சியூட்டும் பார்வையை வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த நிதி எழுத்தாளர் மற்றும் கூட்டு நிதியத்தின் பங்குதாரரான ஹவுஸ்ல், நிஜ உலக நிகழ்வுகள், வரலாற்று எடுத்துக்காட்டுகள் மற்றும் உளவியல் நுண்ணறிவுகளை ஒன்றிணைத்து, வாசகர்களை எதிரொலிக்கும் வகையில் உருவாக்குகிறார். இந்த புத்தகம் பணத்தை நிர்வகிப்பதற்கான ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, இது எங்கள் நிதி நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பயணமாகும் நிதியியல் கல்வியறிவின் நிலைகள், அவரது சொந்த அனுபவங்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க நபர்களிடமிருந்தும் வரையப்பட்ட கதைசொல்லல் அணுகுமுறை, நிதி நிபுணரின் விரிவுரையை விட அறிவார்ந்த நண்பருடன் உரையாடுவதைப் போன்றது. செல்வம் என்பது இருப்புநிலைக் குறிப்பில் உள்ள டாலர்கள் மற்றும் சென்ட்களைப் பற்றியது மட்டுமல்ல, பணத்துடனான நமது உறவை வடிவமைக்கும் உணர்ச்சிகள்,...