முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2500 ஆண்டுகளாக... Part 1

 இந்தியாவில் இந்துத் தாழ்த்தப்பட்ட சாதி ஒன்றில் ஏழ்மைக் குடும்பத்தில் அம்பேத்கர் பிறந்தார். தீண்டப்படாதவர்களுள் வரையறுக்கப்பட்ட பல பிரிவுகள் உள்ளன. இந்துச் சமூக அமைப்பில் கடைநிலை மக்கள் இவர்களே. பல நூற்றாண்டுகளாகச் சாதி இந்துக்கள் இவர்களைத் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கி வைத்துள்ளனர். 1950இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தீண்டாமையை ஒழிப்பதற்கு வழிவகை செய்வதற்கு முன்னர்வரை 'தீண்டப்படாதவர்", 'அணுகக்கூடாதவர்', 'காணக்கூடாதவர்' என்ற முப்பிரிவினராகத் தீண்டப்படாதவர்கள் பிரிக்கப்பட்டிருந்தனர். முப்பது கோடி இந்துக்களில் தீண்டப்படாதவர்கள் ஆறு கோடி பேர். அதாவது இந்துஸ்தானத்தில் இவர்கள் இருபது விழுக்காட்டி னராக இருக்கின்றனர். சுருங்கக் கூறுவதானால் ஒவ்வொரு அய்ந்தாவது இந்துவும் தீண்டப்படாத ஆணாகவோ, பெண்ணாகவோ, குழந்தையாகவோ இருக்கிறார்கள்.

தீண்டப்படாதவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல வகையான பெயர்களால் குறிக்கப்படுகின்றனர். தீண்டப்படாத வர்கள் பறையர், பஞ்சமர், ஆதிருத்திரர், அவர்ணஸ்தர், அந்திய ஜாஸ், நாமசூத்திரர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுடைய சமூக இயலாமைகள் எண்ணற்றவை; இவை யனைத்தும் திட்டமிட்டுச் சுமத்தப்பட்டவை; கொடுமையானவை. இவர்கள் தொட்டால், இவர்களின் நிழல் பட்டால், குரல் கேட்டால் தீட்டாகிவிடுவோம் என்று சாதி இந்துக்கள் கருதுகின்றனர். எனவே ஒரு சாதி இந்து எதிரில் வரும்போது இவர்கள் “வழிவிட்டு விலகி ஓதுங்கிட வேண்டும்.


இவர்கள் சில வகையான வீட்டு விலங்குகளை வளர்க்கக் கூடாது எனத் தடுக்கப்பட்டனர். குறிப்பிட்ட உலோகத்தாலான அணிகலன்களை மட்டுமே இவர்கள் அணிய வேண்டும். இவர்கள் எந்த வகை உணவை உண்ண வேண்டும்; எது போன்ற உடையை உடுத்த வேண்டும்; எவ்வகையான காலணிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது. கிராமங்களுக்கு வெளியில் அழுக்கான இருண்ட தூய்மையற்ற குடியிருப்புகளில் வாழுமாறு இவர்கள்  கட்டாயப்படுத்தப்பட்டனர். புகை படிந்த, இருள் நிறைந்த, அசுத்தம் மிகுந்த குடிசைகளில் இவர்கள் வாழ்ந்தனர்.

தலையில் தலைப்பாகை, கையில் தடி, தோளில் ஒரு முரட்டுப் போர்வை; இடுப்பில் ஒரு கோவணம்; இதுதான் ஓர் ஆணின் கோலம். பெண்களுக்கோ முழங்கால் அளவுக்கும் எட்டாத முரட்டுச் சேலை மட்டுமே உடை.


இந்தத் தீண்டப்படாத வகுப்பு இந்துக்களுக்குப் பொதுக் கிணற்றைப் பயன்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. எனவே எத்தகைய அழுக்கு நீர் எங்குக் கிடைத்தாலும் குடிக்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர். சாதி இந்துக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் தீண்டப்படாத வகுப்பு மக்களின் குழந்தைகள்: சேர்க்கப்படவில்லை. இவர்கள் இந்துக் கடவுள்களை வழிபடுகிறார்கள்; இந்துப் பண்டிகைகளைக் கொண் டாடுகிறார்கள்; ஆனால் இவர்களுக்கு இந்துக் கோயில் களின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. மயிர் மழிப்போரும், துணி வெளுப் போரும் இவர்களுக்கு ஊழியம் செய்ய மறுத்தனர்.


சாதி இந்துக்கள் எறும்புகளுக்குக்கூட விருப்புடன் சர்க்கரை யைத் தூவுகின்றனர்; வீட்டில் நாய், பூனை போன்றவற்றை வளர்க்கின்றனர். மற்ற மதத்துக்காரர்களை வீட்டிற்குள் அழைக்கின் றனர். ஆனால் தீண்டப்படாதவர்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் தரவும் மறுக்கின்றனர்; எள் முனையளவுகூட இரக்கம் காட்டுவ தில்லை. தீண்டப்படாத வகுப்பு இந்துக்கள் மனிதத்தன்மை அற்ற முறையில் விலங்குகளை விட இழிவாக நடத்தப்படுகின்றனர். சிற்றூர்களிலும் சிறு நகரங்களிலும் இந் நிலையே இன்றும் நீடிக்கிறது. ஆனால் பெருநகரங்களில் இக்கொடுமை பெரும்பாலும் மறைந்துவருகிறது.


இவர்கள் படும் துன்பங்கள் இந்த அளவோடு நிற்கவில்லை. காலங்காலமாக இவர்கள் கல்லாதவர்கள்; தீண்டப்படாதவர்களாக இழிவாக நடத்தப்பட்டலர்கள். எனவே காவல்துறை, இராணுவம் உட்பட அனைத்துப் பொது ஊழியத் துறைகளிலும் இவர் களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆதலால் பரம்பரைத் தொழில்க ளையே செய்துவருகின்றனர். தாழ்ந்த, இழிந்த தொழில்களாகக் கருதப்படும் தெருக்கூட்டுதல், மலம் அள்ளுதல், செருப்புத் தைத்தல் போன்றவற்றைச் சிலர் செய்கின்றனர். இறந்த மாடுகளின் தோலை உரித்தல், அவற்றைப் பதப்படுத்தல் போன்றவற்றைச் செய்கின்றனர். மூங்கில் வெட்டுதல், கரும்பு வெட்டுதல், புல் அறுத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளனர். வாய்ப்புக் கிடைத்த சிலர் ருத்தகையாளர்களாக நிலத்தில் சாகுபடி செய்கின்ற னர்; பலர் விவசாயக் கூலிகளாக உள்ளனர். பெரும்பாலோர்.

கிராமத்திற்குத் தொண்டூழியம் செய்பவர்கள். இவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் உணவு, மற்றும் தானியத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர்; செத்த ஆடுமாடுகளை உண்கின்றனர். இவ்வாறாக இவர்களுக்குச் சமுதாய, மத மற்றும் குடிமை உரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் இவர்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்திக்கொள்ள வாய்ப்பே இல்லை. எனவே, தீண்டப்படாத இந்துக்களின் வாழ்க்கை மிகப் பழங் காலத்து வாழ்க்கையாகவே இருக்கிறது. சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட, கொஞ்சமும் போதாத, தூய்மையற்ற சூழலில் பல துன்பங்களுடன் இவர்கள் வாழ்க்கை தொடர்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் இவர்கள் கடனில் பிறந்து கடனிலேயே மடிகிறார்கள்; தீண்டப்படாதவர்களா கவே பிறக்கிறார்கள்; தீண்டப்படாதவர்களாகவே வாழ்கிறார்கள்; தீண்டப்படாதவர்களாகவே இறக்கிறார்கள்.


https://youtube.com/channel/UChXZazwXBCbHV1gpQrE-7-w.     

 @ambeth_priyan_






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தற்கால தமிழ்நாட்டின் வரலாறு க.வெங்கடேசன் [PDF]

தற்கால தமிழ்நாட்டு வரலாறு - டாக்டர் க.வெங்கடேசன் (History of Modern Tamil Nadu - Dr. G.Venkatesan) தற்கால தமிழ்நாட்டு வரலாறு' தமிழ்நாட்டு வரலாற்று வரைவியியலில் ஒரு புதிய முயற்சியாகும். வழக்கமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து (1801) தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் தமிழக வரலாறு வரையப்படுகிறது. எனினும், இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயர் தமிழ்நாட்டில் காலூன்றிய காலத்திலிருந்து தற்கால தமிழ்நாட்டு வரலாறு துவங்குகிறது என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆங்கிலேயர் தற்காலத்தின் சின்னமான அறிவியல்-தொழில்நுட்ப அணுகுமுறையில் ஆட்சி செய்ததேயாகும். தற்கால தமிழ்நாட்டு வரலாறு 17 ஆம் நூற்றாண்டுக்கும் 21ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகளை உள்ளடக்கியது. இந்த நூல், அனைத்து நிலை வரலாற்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆட்சிப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கும் மிகு பயன் தருவதாகும்.

அமைப்பாய் திரள்வோம்- தொல் திருமாவளவன் [PDF]

கடைசி மனிதனுக்கும் சனநாயகம் - எளிய மக்களுக்கும் அதிகாரம் என்னும் இலட்சியத்தோடு புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் போன்ற தலைவர்களின் கருத்தியலை அனைத்து தளங்களிலும் வேரூன்ற செய்வதற்கு தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. விசிகவின் அடுத்தகட்டப் பாய்ச்சலாகத் தற்போது ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இலட்சியப் பாதையில் என்னுடன் இணைந்து பயணிக்க இணையதளத்தில் பதிவுசெய்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்! சமத்துவ சமுதாயம் அமைத்திட, வகுப்புவாத சக்திகளிடம் இருந்து சனநாயகத்தைப் பாதுகாத்திட நாம் அனைவரும் அணியமாவோம்! அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் எதிராக ஒன்றிணைந்து செயலாற்றுவோம்! "அமைப்பாய்த் திரள்வோம்! அதிகாரம் வெல்வோம்!" என்பது சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்டும் மற்றும் மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கமாகும். தொல். திருமாவளவன் இதனை முன்ன நடத்தியுள்ளார். இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் கீழே உள்ளன: முக்கிய நோக்கங்கள் • சமத்துவ சம...

பணம் சார் உளவியல்_The Psychology of Money by மார்கன் ஹௌஸ்ஸேல்[PDF]

மோர்கன் ஹவுஸ்லின் தி சைக்காலஜி ஆஃப் மனி" என்பது மனித நடத்தை மற்றும் நிதி முடிவுகளுக்கு இடையே உள்ள சிக்கலான உறவின் சிந்தனையைத் தூண்டும் ஆய்வு ஆகும். 2020 இல் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், பாரம்பரிய நிதி ஆலோசனைகளைத் தாண்டி, உளவியல் அம்சங்களை ஆராய்வதற்கான ஒரு புத்துணர்ச்சியூட்டும் பார்வையை வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த நிதி எழுத்தாளர் மற்றும் கூட்டு நிதியத்தின் பங்குதாரரான ஹவுஸ்ல், நிஜ உலக நிகழ்வுகள், வரலாற்று எடுத்துக்காட்டுகள் மற்றும் உளவியல் நுண்ணறிவுகளை ஒன்றிணைத்து, வாசகர்களை எதிரொலிக்கும் வகையில் உருவாக்குகிறார். இந்த புத்தகம் பணத்தை நிர்வகிப்பதற்கான ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, இது எங்கள் நிதி நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பயணமாகும் நிதியியல் கல்வியறிவின் நிலைகள், அவரது சொந்த அனுபவங்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க நபர்களிடமிருந்தும் வரையப்பட்ட கதைசொல்லல் அணுகுமுறை, நிதி நிபுணரின் விரிவுரையை விட அறிவார்ந்த நண்பருடன் உரையாடுவதைப் போன்றது. செல்வம் என்பது இருப்புநிலைக் குறிப்பில் உள்ள டாலர்கள் மற்றும் சென்ட்களைப் பற்றியது மட்டுமல்ல, பணத்துடனான நமது உறவை வடிவமைக்கும் உணர்ச்சிகள்,...